ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும்…! எவ்வளவு கட்டணம் தெரியுமா…?

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 31-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை- குஜராத் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3-ம் தேதி இந்த போட்டியானது நடைபெற உள்ளது.


போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது. காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும். டிக்கெட் விலை ரூ.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

#Rain: இந்த தேதிகளில் எல்லாம் கனமழை...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!

Sun Mar 26 , 2023
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, […]
Rains Students Rep PTI 190522 1200x800

You May Like