உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணாம வேலையை முடிச்சிருங்க..!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போர் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அவரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.


இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தகுதியுடைய தமிழறிஞர்களுக்கு ரூ.3,500 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், மருத்துவ படியாக வாரந்தோறும் ரூ.500 வழங்கப்படும். இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சித் துறையின் துறை இயக்குனர்கள் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

CHELLA

Next Post

சூப்பர் அறிவிப்பு..!! ரேஷன் கடைகளில் கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் இனி மானிய விலையில் கிடைக்கும்..!!

Thu Mar 30 , 2023
புதுச்சேரி சட்டப்பேரவையில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக் குமார், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டு சேவைகளுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் பொது சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு புதிய திட்டப்படி இலவச அரிசி, மானிய சர்க்கரை, சிறுதானியங்கள் தரப்படும். கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட தானியங்கள் மானிய விலையில் ரேஷன் […]
ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது..? புதிய கார்டு விண்ணப்பிப்பது இவ்வளவு ஈசியா..?

You May Like