fbpx

அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததா..? பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழான அறிவிப்பில் 27 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்பில் 68 சதவீதம் பணிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் உள்ளது. நிதியமைச்சர் பொய்யான தகவலை சொல்லி வருவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இத்திட்டத்தை முதலில் தொடங்கியது அதிமுகதான். மேலும், அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் உணவுகளை ருசியாக கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சியில் பணிபுரியும் ஆட்களை குறைத்து, தரமான உணவு இல்லை என்பதால் உணவு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றார். பாஜக- அதிமுக கூட்டணி விவகாரம் குறித்து பேசுகையில், ”அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

அனைத்து கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம்..!! வெளியானது முக்கிய அறிவிப்பு..!!

Thu Mar 30 , 2023
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் அவர்களே பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வர். மேலும், அரசு கல்லூரிகள் அரசின் பாடத்திட்டங்களை பின்பற்றுவார்கள். எனினும் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் 75 சதவீத மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு உருவாக்கி தரும் பாடத்திட்டங்களை தான் பின்பற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 25% பாடத்திட்டங்களை அந்தந்த கல்லூரிகளே வடிவமைத்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. […]

You May Like