கடந்த மார்ச் 25ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் அங்கிருந்த பூங்கா ஒன்றில் தன்னுடைய ஆண் நண்பருடன் இரவு 9 மணி அளவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கும், இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களை பூங்காவுக்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து தனது நண்பருடன் சேர்ந்து அந்த இளைஞரும் பெண்ணை மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
அந்தப் பெண்ணை காரிலேயே வைத்து நான்கு பேரும் சேர்ந்து மாறி மாறி இரவு முழுவதும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அதிகாலை 4 மணிக்கு அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு முன் இறக்கிவிட்டு இதை குடும்பத்தினரிடமோ அல்லது வெளியிலேயோ கூறினால் கொலை செய்து விடுவோம் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் அந்தப் பெண் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிற்கு பலருடன் நடந்து சென்ற போது குடும்பத்தினர் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர்.
இதை அடுத்து அந்தப் பெண் தனக்கு நேரில் கொடுமைகளை தனது குடும்பத்திடம் கூறிய நிலையில் பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கிரண், விஜய், சதீஷ் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைதாகி உள்ள நான்கு பேருமே 22-லிருந்து 26 வயதை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.