fbpx

சூப்பர் நியூஸ்..!! ரயில்களில் லோயர் பெர்த் வேண்டுமா..? இனி யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்லை..!!

இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பல ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க பலரும் முன்பதிவு செய்யும் நிலையில், விருப்பப்பட்ட பெர்த் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. முக்கியமாக முதியவர்கள், பெண்களுக்கு மேல் பெர்த் கிடைத்தால், அவர்கள் அதில் ஏற சிரமப்படுவதால், கீழ் பெர்த்தில் உள்ளவர்களிடம் பேசி மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இனி யாரிடமும் சென்று லோயர் பெர்த்துக்காக கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால், இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். அதில், ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் படுக்கை வசதி பதிவு செய்தால் அவர்கள் விருப்பம் தெரிவிக்காமலே தானாக கீழ் பெர்த் புக்கிங் ஆகும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் இந்த தானியங்கி முன்பதிவு 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் நான்கு முதல் ஐந்து படுக்கை என்ற அளவிலும், இரண்டடுக்கு ஏசி பெட்டியில் மூன்றுக்கு நான்கு என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஜீ தமிழ் சரிகமப பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மரணம்…..! அதிர்ச்சியில் பிரபலங்கள்…..!

Tue Apr 4 , 2023
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக அறிமுகமானவர் ரமணியம்மாள் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்ற பெயரும் உண்டு. இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் குறிப்பாக இவருடைய நாட்டுப்புறப் பாடல் வரிகள் பலரின் நெஞ்சங்களை கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தமிழில் வெளியான காத்தவராயன் திரைப்படத்தின் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2 நெஞ்சம் உண்டு […]

You May Like