உடல் எடையை குறைப்பதற்காக கொழுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது 28 வயது ஸ்காட்லாந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நாடகிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த 28 வயது இளம்பெண் ஷானவ் போவ் இவர் உடல் எடையில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். அதனால் துருக்கி நாட்டில் உடல் எடையை குறைக்கும் கேஸ்ட்ரிக் பேண்ட் என்னும் அறுவை சிகிச்சையை செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.
கேஸ் ட்ரிக் பேண்ட் அறுவை சிகிச்சை என்பது நாம் அதிகப்படியாக உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்க நமது குடல் பகுதியில் பட்டை போன்ற ஒரு அமைப்பு பொருத்தப்படும். இந்த அறுவை சிகிச்சையை துருக்கியில் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார் ஷானவ் போவ். இச்சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இன்றைய நவீன அறிவியல் உலகில் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளை பின் கொள்ளாமல் இதுபோன்று செயற்கையாக செய்யப்படும் அறுவை சிகிச்சையினால் தற்பொழுது அடிக்கடி மரணம் நிகழ்கிறது என்பது வருத்தத்துக்குரியது.