மாம்பழ பிரியர்களா நீங்கள்?… 24 மணிநேரத்தில் வீட்டிற்கே வரும் மாம்பழம்!… இந்திய அஞ்சல் துறை புதிய ஏற்பாடு!

மாம்பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக நுகர்வோரின் வீட்டு வாசலில் விநியோகிக்கும் முறையை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.


கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எந்தப் பகுதியிலிருந்தும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் மாம்பழத்தை ஆர்டர் செய்தால், அது வெறும் 24 மணி நேரத்தில் சப்ளை செய்யப்படும். அதற்காக, கோலார் விவசாயிகள், தபால் துறையின் ஒத்துழைப்புடன் ‘நம்ம தோட்டம்’ என்ற தளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நுகர்வோரின் வீட்டு வாசலில் பழங்களை கொண்டு சேர்க்கின்றனர். ஆர்டர் செய்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு பெட்டியாவது வாங்க வேண்டும். அந்த பெட்டியில் மூன்று கிலோ மாம்பழம் இருக்கும். அல்போன்ஸா, ரஸ்பூரி, கேசர், பாதாமி உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் கிடைக்கும். விவசாயிகள் சாகுபடி செய்த மாம்பழங்கள், இடைத்தரகர்கள் இன்றி, தபால் துறை மூலம் நேரடியாக நுகர்வோர் கைக்கு வந்தடையும்.

தோட்டங்களில் ரசாயனம் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். முன்னதாக கோவிட் தொற்று காலத்தில் தபால் துறை மூலம் ஆன்லைனில் சுமார் 100 குவிண்டால் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த முறை அதைவிட அதிகமாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாம்பழ விற்பனை மற்றும் மேம்பாட்டு கழகத்தின் ஒத்துழைப்பும் இந்தத் திட்டத்துக்கு உதவுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்ய https://www.kolarmangoes.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். 3 கிலோ மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டி ரூ.530 முதல் விற்பனைக்கு உள்ளன. மேலும் இதுதொடர்பான தகவலுக்கு 9886116046 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசிக்கும் கிஷன் சுமன் என்ற விவசாயியின் வயல்களில் விளையும் உலகப் பிரசித்தி பெற்ற மாம்பழமும் தபால் மூலம் கிடைக்கும். இந்த மாம்பழத்தின் பெயர் மியாசாகி மாம்பழம். உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழமாக இது கருதப்படுகிறது. கோட்டாவில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது கிராமத்தில் விவசாயம் செய்யும் இந்த விவசாயி, தனது விவசாயத்திற்காக மாநில அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். இரண்டே வருடங்களில் பலன் தரத் தொடங்கும் அருமையான மா ரகத்தை இந்த விவசாயி வளர்த்து வருகிறார். இந்த வகை மாம்பழம் சுமார் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் மியாசாகி நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த வகை மாம்பழத்துக்கு மியாசாகி மாம்பழம் என்று பெயர். ஆனால் இந்த மாம்பழம் ஒரு சிறப்பு பருவத்தில் மட்டுமே வளரும். இந்த மாம்பழம் வெப்பம் அதிகம் உள்ள காலத்தில் வளராது.

KOKILA

Next Post

சமூக வலைதள பதிவுகளை சரிபார்க்க!... புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய தகவல் தொழிநுட்ப துறை அமைச்சகம்!

Sat Apr 8 , 2023
சமூக வலைதள பதிவுகளை சரிபார்க்க PIBக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் வகுத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் முறைகேடான பல பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்பதும் இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இந்தநிலையில், கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவுகளை சரிபார்க்க, PIB […]
Social Media 1

You May Like