அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தற்போது கோடை காலம் என்பதால் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் மின்சார தேவைகளை குறைக்கும் வகையில், மாநில அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பதற்கு பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.


அதன்படி, மே 2ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று முதலமைச்சர் பகவந்த் சிங் மன் அறிவித்துள்ளார். இந்த முடிவின் மூலம் 300 முதல் 350 மெகாவாட் வரையிலான மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் பொதுமக்களும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னரே அரசு அலுவலகங்களில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

CHELLA

Next Post

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தாச்சு புதிய வசதி..!! இனி எல்லாமே ஈஸிதான்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Sun Apr 9 , 2023
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு வசதிகள் அதிகம் என்பதால் மக்கள் ரயிலையே விரும்புகின்றனர். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இந்நிலையில், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் சற்று சிரமத்தை அனுபவிப்பார்கள். டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விவரங்களை விண்ணப்பத்தில் டைப்பிங் மூலமாக நிரப்ப வேண்டும். இதனால் சற்று காலதாமதம் […]
india train ticket

You May Like