தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் வருகின்ற இன்று காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.