படிக்காமல் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்திய சிறுமி..!! பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் உள்ள மல்வானி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர். இதில், அந்த 15 வயது சிறுமி 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமி படிக்காமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதைக்கவனித்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை கண்டித்து செல்போனை வாங்கிக் கொண்டனர்.


இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தான் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

அடுத்த ஷாக்.. வரும் நாட்களில் சர்க்கரை விலை கடுமையாக உயரும்.. என்ன காரணம் தெரியுமா..?

Tue Apr 11 , 2023
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் இருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் சர்க்கரை விலை புதிய உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் 2022-23 ஆண்டுக்கான சர்க்கரை உற்பத்தி மதிப்பீட்டை 34.5 மில்லியன் டன்னிலிருந்து 33.5 மில்லியன் டன்னாக (மெட்ரிக் டன்) குறைத்துள்ளதாக உணவுச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார். மகாராஷ்டிராவில் காலம் தவறி பெய்த பருவமழை, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரையை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் […]
sugar

You May Like