வயதானாலும் இளமை தோற்றம் வேண்டுமா?… தூதுவளைப் பூக்களின் மருத்துவ குணங்கள் இதோ!

தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும்.


இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.உடல் வலுவடையும் தூதுவளைப்பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல செய்து சாப்பிட ருசியாக இருக்கும், உடல் வலுவடையும். தூதுவளைப் பூக்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒருவேளை மட்டும் அருந்தவும். இதனால் நரம்புகள் இறுகும். உடல் உறுதி பெறும். ஆண்மையை பெருக்கும் தன்மை தூதுவளை பூவிற்கு உள்ளது.

KOKILA

Next Post

மன்னர்கள் காலத்தின் வயகராவான ஜாதிக்காய்!... முகத்தை அழகாக்கும்!... சரும நோய்களுக்கு சிறந்த தீர்வு!

Sat Apr 15 , 2023
மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப்பட்டுள்ள ஜாதிக்காயின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். ஜாதிக்காய் மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள் ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல்.ஜாதிக்காய் வெண்ணெயில் […]
saathikai

You May Like