மகாராஷ்டிராவில் கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்
மகாராஷ்டிராவில் பூஷன் விருது வழங்கும் நிகழ்வு நேற்று திறந்த வெளியில் நடைபெற்றது. கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 24 பேர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நவி மும்பையின் கார்கரில் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவின் போது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும், அதே நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.50 பேர் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.