3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில் 3 வயது சிறுமி மழலை வகுப்பில் படித்து வருகிறார். அதே பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் மாணவன் அந்த சிறுமியுடன் நட்புடன் பழகி வந்திருக்கிறான். இந்த பழக்கத்தில் சிறுமியை பள்ளியின் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், வீட்டிற்கு வந்த சிறுமி, பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்தவற்றை சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவன் மீது போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரால் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த சிறுவனை அழைத்து வந்து போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுமியின் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்திருக்கிறது. இதன் பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதல் வகுப்பு படிக்கும் 6 வயதே ஆன சிறுவன், மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் முசாபர் நகர் மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.