fbpx

பெற்றோர்களே மிகவும் உஷார்..!! 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 6 வயது சிறுவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில் 3 வயது சிறுமி மழலை வகுப்பில் படித்து வருகிறார். அதே பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் மாணவன் அந்த சிறுமியுடன் நட்புடன் பழகி வந்திருக்கிறான். இந்த பழக்கத்தில் சிறுமியை பள்ளியின் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், வீட்டிற்கு வந்த சிறுமி, பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்தவற்றை சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவன் மீது போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரால் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த சிறுவனை அழைத்து வந்து போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுமியின் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்திருக்கிறது. இதன் பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதல் வகுப்பு படிக்கும் 6 வயதே ஆன சிறுவன், மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் முசாபர் நகர் மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Chella

Next Post

இயேசுவை சந்திக்கணும்னா இப்படி பண்ணுங்க..!! உள்ளூர் போதகரால் உயிரை விட்ட 4 பேர்..!! பலர் கவலைக்கிடம்..!!

Mon Apr 17 , 2023
கென்யாவில் இயேசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கென்யாவின் கடலோர கிலிஃபி கவுண்டியில் இயேசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம் இருந்து, சர்ச்சைக்குரிய வழிபாட்டில் ஈடுபட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தின் நான்கு வழிபாட்டாளர்கள் மகிரினி (Magarini) தொகுதியின் ஷகாஹோலா கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்த […]

You May Like