முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே, இப்போது அரசுக்கு இருக்கக்கூடிய நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப, ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.

அதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் ஜூன் மாதம் முதல் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அதேபோல், குடும்ப ஓய்வூதியம் 12,500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூறினார். மேலும் முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

RR vs LSG..!! பரபரப்பான ஆட்டம்..!! 14 ரன்கள் வித்தியாசம்..!! வரலாற்று வெற்றியை பதிவு செய்தது லக்னோ..!!

Thu Apr 20 , 2023
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்றைய போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கைல் மேயர்ஸ் 51 ரன்கள் எடுத்த […]
WhatsApp Image 2023 04 20 at 8.30.21 AM

You May Like