’யாராச்சும் காப்பாத்துங்க’..!! கிணற்றில் இருந்து கேட்ட குரல்..!! ஓடிவந்த மக்கள்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அந்தியூர் அத்தாணி என்ற பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (55) – ரேணுகாதேவி (42) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகன் கார்த்தி (21) பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் சில ஆண்டுகளாக ஒத்தப்பனை மேடு பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர்கள் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து, காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்.. என்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் கார்த்தி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.


அப்போது, கார்த்தியின் தாய் ரேணுகாதேவி சடலமாகவும், தந்தை கிருஷ்ணமூர்த்தி தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்துள்ளார். கார்த்தியையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, கார்த்தியின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கார்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது 2 பேர் பொக்லைன் பேட்டரிகளை கழட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது இருவரும் என்னை தாக்கி கிணற்றுக்குள் தூக்கி வீசினர். அதற்கு பிறகு நடந்த சம்பவம் எதுவும் எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

எனினும் அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் கார்த்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், கார்த்தி தனது பெற்றோரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததும், அவரே கிணற்றில் குதித்து திருடர்கள் தாக்கியதாக நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

CHELLA

Next Post

காலை உணவு திட்டம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை..!!

Sun Apr 23 , 2023
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பாக செயல்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநிலத்திட்ட இயக்குனர் இளம் பகவத் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு முதல் […]
WhatsApp Image 2023 01 06 at 9.05.11 AM

You May Like