’ரொம்ப கஷ்டமா இருக்கு’..!! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய கோபி..!! அவரே வெளியிட்ட வீடியோ..!!

‘பாக்கியலட்சுமி’ தொடரில் இருந்து கோபியாக நடித்து வரும் சதீஷ், விலகுவதாக அறிவித்துள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பாக்கியலட்சுமி’. 1000 எபிசோடுகளை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல், முதல் முதலில் மராத்தி மொழியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும், மலையாளத்திலும் ரீமேக் செய்து ஒளிபரப்பானது. பின்னர் கடந்த 2020 ஜூலை மாதம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் துவங்கப்பட்டது. முதல் நாளில் இருந்து இப்போது வரை தமிழில் ‘பாக்கிய லட்சுமி’ சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .

இந்த சீரியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது கோபியின் கதாபாத்திரம் தான். நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா.. என பல சமயங்களில் கோபி ரசிகர்களை யோசிக்க வைத்து விடுவார். அப்பாவித்தனமான முகத்தை வச்சிக்கிட்டு பண்றது எல்லாம் வில்லங்கமான விஷயங்களை தான். பயந்த புள்ள மாதிரியே நடிச்சு… எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை ஸ்கோர் செய்து விடுவார். ஏற்கனவே இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சில தகவல்கள் வெளியான போது, அதற்கு கோபி மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது அவரே இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வெளியிட்டுள்ள தன்னுடைய வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம்… நான் சொல்லப்போறது, நிறைய பேருக்கு கோபம், எரிச்சல், வருத்தம், போன்றவற்றை வர வைக்கலாம்.  கஷ்டமா இருக்கு, இருந்தாலும் இதை செஞ்சு ஆகணும். இன்னும் கொஞ்ச நாட்களில், அதாவது இன்னும் பத்து பதினைந்து எபிசோடில்.. ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சதீஷ் ஆகிய நான். கோபியா நடிச்சுக்கிட்டு இருக்கிற இந்த கேரக்டரை விட்டு நான் விலக காரணங்கள் பல இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் பர்சனல் காரணம். இந்த கோபி கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மிகவும் நன்றி. நானும் யாருக்கும், எந்த கஷ்டமும் கொடுக்காமல், எல்லோரும் பாராட்டும்படி என்னால் முடிந்தவரை சுமாராக நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கும், என் மீது அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்” என தெரிவித்துள்ளார். இவருடைய பதிவு, இந்த சீரியல் ரசிகர்கள் மற்றும் சதீஷின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

CHELLA

Next Post

ஆஸ்கர் விருது வென்ற பயில்வான்..!! ஃபோட்டோ போட்டு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு..!! வெறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

Tue Apr 25 , 2023
இயக்குனர் வெங்கட் பிரபு ’மாநாடு’ திரைப்படத்திற்குப் பிறகு வேற லெவலில் உள்ளார். எப்போதுமே கலகலப்பாக இருக்கக்கூடிய அவர், தனது சமூக வலைதள பக்கத்தில் ஆச்சரியப்படும் விதமான விஷயங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு சமீபத்தில் பயில்வான் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதாவது, பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப்பில் பேசி அதிக பிரபலமாகி உள்ளார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவருடைய புகைப்படத்தை […]
ஆஸ்கர் விருது வென்ற பயில்வான்..!! ஃபோட்டோ போட்டு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு..!! வெறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

You May Like