இந்தியாவில் இனி மரண தண்டனை கிடையாது..? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன புதிய தகவல்..!!

மரண தண்டனையை நிறைவேற்ற வேறு வழியை ஆராய மத்திய அரசு ஓர் குழுவை நியமிக்க உள்ளது.


இந்தியாவில் மரண தண்டனை என்பது உச்சபட்ச தண்டனையாக இருக்கிறது. இந்த மரண தண்டனையானது தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தூக்கிலிடபட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு மாற்றாக வலியற்ற முறைப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுகையில், மரண தண்டனையினை தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றுவதற்கு மாற்றாக வலியற்ற முறையில் மரண தண்டனை நிறைவேற்ற விரைவில் மத்திய அரசு ஓர் குழு ஒன்றை அமைக்க உள்ளது என குறிப்பிடப்பட்டது.

CHELLA

Next Post

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து..!! ரயில்வே துறைக்கு ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Tue May 2 , 2023
ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ரயில்வே துறைக்கு ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகைகள் இந்தியன் ரயில்வே மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் ரயில்களில் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக […]
Train 1 1

You May Like