கடந்த 2008ஆம் ஆண்டு தனது 18 வயதில் கூலி தொழிலாளியாக டெல்லி வந்தவன் தான் ரவீந்தர் குமார். போதை பொருளுக்கு அடிமையான ரவீந்தர், ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளான். அதுமட்டுமில்லாமல் தன்னிடம் சிக்கும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து இறுதியாக கொலையும் செய்து விடுவான். 2008இல் தொடங்கிய இந்த கொடூர செயல் 2015ஆம் ஆண்டு ரவீந்தர் காவல்துறையில் சிக்கும் வரை தொடர்ந்துள்ளது.
7 ஆண்டுகளில் 6 முதல் 12 வயதிலான 30 குழந்தைகளை கொடூரன் ரவீந்தர் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். அறியா குழந்தைகளை மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு தன்னை அடையாளம் காட்டி விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்களை கொலை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தான். 7 ஆண்டுகளாக இத்தகைய கொடூர செயலை அரங்கேற்றி வந்த ரவீந்தர் 2015ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை கடத்திய சம்பவத்தில் டெல்லி காவல்துறையால், கைது செய்யப்பட்டான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ”முதலில் தான், உறவினர்கள் வீட்டிற்கு வரும் குழந்தைகளை குறிவைப்பதாகவும், அந்த இடத்தில் 10 – 15 நாட்கள் தங்கியிருந்து தனக்கு ஏற்ற குழந்தைகளை கண்டுபிடிப்பதாகவும், மேலும் யாருக்கும் சந்தேகம் வராதபடி எந்த இடத்திலும் 2 – 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்ததில்லை என்றும் கூறியுள்ளான். இதுபோன்று, கொலை செய்த சிறுவர், சிறுமிகளின் உடல்களை வயல்களிலும், குளங்களிலும், காடுகளிலும் வீசிவிட்டு வந்ததாக தெரிவித்துள்ளான். ஆனால், மீண்டும் அந்த இடத்திற்கு ஒருபோதும் திரும்பிச் சென்றது கிடையாதாம்.
நான் மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் எடுத்துகொண்டிருக்கும் வேளையில் எனது சிந்தனையின் கட்டுப்பாட்டை இழந்து விடுவேன். இது தவறு என்று எனக்கு தெரியும். ஆனால் என்னை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. பின்னர் போதை தெளியும்போதுதான் எனது நடவடிக்கைக்காக வருத்தம் அடைவேன்” என்று காவல்துறையின் விசாரணையில் ரவீந்தர் கூறியுள்ளான். விசாரணையில், அவன் பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட போலீசார், அவனுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். இவர் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கிற்கு இரண்டு வாரங்களில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. 30 குழந்தைகளை கொன்ற கொடூரன் ரவீந்தர் குமாருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.