fbpx

SSC பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…! ஜுன் 8-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் அப்ளை பண்ணலாம்…!

மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி (டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இந்த தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்று இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.06.2023 ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 10.06.2023 ஆகும். ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.தென்னக பகுதிகளில் கணினி மூலம் நடைபெறும் இந்த தேர்வு 22 மையங்களில் ஆகஸ்ட் – 2023-லில் நடைபெறுகிறது. ஆந்திரா மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 மையத்திலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறவுள்ளது.

Vignesh

Next Post

’மாணவர்களே இனி எங்கும் தப்பிக்க முடியாது’..!! அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிரடி உத்தரவு..!!

Wed May 17 , 2023
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநிற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கில், அரசு பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் பள்ளி இடைநீற்றல் குறித்த காரணங்கள் கேட்டறியப்பட்டு மீண்டும் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் […]

You May Like