நடிகை ராஷ்மிகா குறித்த சர்ச்சை பேச்சு..!! முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகிய ஃபர்ஹானா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே, ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதில் தான் நன்றாக நடித்து இருப்பேன் என கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.


இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா பற்றி கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புஷ்பா திரைப்படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை சொல்லவில்லை. ராஷ்மிகாவின் பணி மீது தனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டும்தான் உண்டு என்பதையும் திரையுலகை சேர்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

CHELLA

Next Post

அனுமதியின்றி மின்சாரத்தை திருடி ஆடல், பாடல் நிகழ்ச்சி..!! கரூரில் பரபரப்பு சம்பவம்..!!

Thu May 18 , 2023
கரூரில் அனுமதியின்றி நடைபெற்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சட்ட விரோதமாக மின் கம்பத்திலிருந்து ஒயர் மூலம் மின்சாரம் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் EB காலனி பகுதியில் அமைந்துள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. திருவிழா நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இரவு ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்த […]
WhatsApp Image 2023 05 18 at 4.39.19 PM

You May Like