fbpx

கார் பயணத்தை தவிர்த்து திடீரென்று நள்ளிரவில் லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி….! மகிழ்ச்சியில் லாரி ஓட்டுனர்கள்…..!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ நடைபயணம் தான். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார் ராகுல் காந்தி.

அதேபோல தலைநகர் டெல்லியில் உள்ள சந்தை பகுதிகளுக்கு சென்று பொதுமக்களோடு ஒன்றிணைந்து சாலையோர உணவு சாப்பிட்டது, டெல்லி பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுடன் ஒன்றிணைந்து உரையாடியது என்று சமீபகாலமாக அவ்வப்போது பல்வேறு தரப்பு மக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசுகின்றார்.

அந்த வகையில் நேற்று இரவு டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு காரில் பயணித்த ராகுல் காந்தி திடீரென்று டெல்லி சதீஷ்கர் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி சாலையோர உணவகங்களில் நின்றிருந்த லாரி ஓட்டுனர்களுடன் உரையாடினார்.

அதன் பிறகு யாரும் எதிர்பாராத விதத்தில், தன்னுடைய கார் பயணத்தை தவிர்த்து முர்தலிலிருந்து அம்பலா வரையில் லாரி முன்பகுதியில் லாரி ஓட்டுனருடன் அமர்ந்து பயணித்தார்.

இந்த பயணத்தின் போது லாரி ஓட்டுனர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக வெகு நேரம் உரையாடி இருக்கிறார். இதனை தொடர்ந்து, அம்பலாவில் இருந்து கார் மூலமாக சிம்லாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன

Next Post

மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளையை திருமண சீராக கொண்டு சென்ற மணமகள்….! நெகிழ்ச்சியில் உறவினர்கள்….!

Tue May 23 , 2023
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஐயங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா என்ற இளம் பெண்ணுக்கும், நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞருக்கும் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதில் மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதுடன் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில், […]

You May Like