தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிவியல் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கின்ற சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும், தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று.
2023 – 2024 கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு வரையிலும், 2024-2025 கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரையிலும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் எழுத வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.