செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, சுந்தரத்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணா சிங் பிரதீப் உள்ளிட்டோர் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக அடுத்தடுத்து பணியாற்றினர். இதற்கு நடுவே கள்ளச்சார விவகாரத்தில் பிரதீப்பை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வேறு மாவட்டத்திற்கு புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்தது.
இதற்கு நடுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சாய் பிரணீத் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் காவலர்கள் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரணீத்துக்கு மாவட்ட காவல்துறை சார்பாக பூங்கொத்து கொடுத்து வரவேற்பு வழங்கி, வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது