ஆதார் விவரங்களை புதுப்பிக்க அதிக கட்டணம் வசூலித்தால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம்.
ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதற்கு விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்கு சென்று சேவையை பெறலாம். இணையதளம் மூலம் இதனை மேற்கொள்ள தெரியாதவர்கள் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா மையத்திற்கு சென்று புதுப்பிக்கலாம்.
இருப்பினும் விதிகளை மீறி, பல ஆதார் மையங்கள் 50 முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆதாரில் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை புதுப்பிப்பதற்காக அதிகபட்சம் ரூ.50 வசூல் செய்ய வேண்டும் . அதை மீறி உங்களிடம் கட்டணம் வசூல் செய்தால் நீங்கள் 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் அல்லது https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலம் சென்று புகார் அளிக்கலாம்.