திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்( 31) என்பவர் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை அதிகளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 745 லிட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
வெளி மாநில மதுபான பாட்டில்களை அவர் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் அவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரை செய்ததை ஏற்றுக்கொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் இளவரசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.