7 வயது சிறுமியை 4.50 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம் செய்திருக்கிறார் 38 வயது வாலிபர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலால் அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது மணியா. இப்பகுதியைச் சேர்ந்தவர் பூபால் சிங். கடந்த 21ஆம் தேதி அன்று இந்த வாலிபர் 7 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களுக்கு வந்த புகார் உண்மையா என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். போலீசாரின் விசாரணையில், இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. அந்த 7 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக அவரது தந்தையிடம் 4,50,000 பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அந்த 7 வயது சிறுமியை உடனே மீட்டனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 வயது சிறுமியை 4.50,000 விலை கொடுத்து வாங்கி 38 வயது வாலிபர் ஒருவர் திருமணம் செய்திருக்கும் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.