பெரும் இழப்பு..!! காங்கிரஸ் எம்பி பாலுபாவ் தனோர்கர் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

மகாராஷ்டிரா சந்திரப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்பி பாலுபாவ் தனோர்கர் காலமானார்.

மகாராஷ்டிராவில் இருந்து காங்கிரஸின் ஒரே மக்களவை எம்பியான பாலுபாவ் தனோர்கர் உடல்நல குறைவால் தனது 48 வயதில் இன்று அதிகாலை காலமானார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சைக்காக அவர் கடந்த வாரம் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், அவர் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று காங்கிரஸின் பாலாசாகேப் தோரட் கூறினார். பாலுபாவ் தனோர்கர், பாலாசாகேப் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸில் இணைந்ததை அடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு சந்திராபூர் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

CHELLA

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு..!! புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue May 30 , 2023
புதுச்சேரியில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ”ஜூன் 1ஆம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் காரணமாக தற்போது புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரைக்கால் மாஹே மற்றும் ஏனால் ஆகிய பிராந்தியங்களுக்கும் பொருந்தும் […]
images 2023 03 16T052058.901

You May Like