புதுச்சேரியில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ”ஜூன் 1ஆம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் காரணமாக தற்போது புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரைக்கால் மாஹே மற்றும் ஏனால் ஆகிய பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனால், ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.