’பழைய வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்’..!! சென்னை காவல்துறை அறிவிப்பு..!!

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உரிமை கோரப்படாத 260 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிக்கும் இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்கின்றனர். அப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை போலீசார் அவ்வப்போது ஏலம் விடுவார்கள். அப்படி ஏலம் விடப்படும் வாகனங்கள் குறித்து தான் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 260 இருசக்கர வாகனங்கள், சென்னை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் 28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஏலத்திற்கான முன்பதிவு 14.06.2023 மற்றும் 15.06.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 14 மணி வரை சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் GST பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர். 28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் GST தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

பயிர்களின் ஆதார விலை அதிகரிப்பு- மத்திய அரசு அதிரடி

Wed Jun 7 , 2023
பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். துவரம் பருப்பு, மக்காச்சோளம், நெல், உளுந்து, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். […]
farmers iphoto

You May Like