தென்காசி மாவட்டம் இலத்தூர் சுண்டக்காட்டு தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மாடசாமி கல்லூரி மாணவரான இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். இது தொடர்பாக மாரிமுத்து வழங்கிய புகாரின் அடிப்படையில், இலத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதே பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று பயன்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த சில தினங்களாக தன்னுடைய வீட்டை லட்சுமணன் சீரமைத்து வந்தார். இந்த நிலையில் தான் வீட்டின் கழிவு நீர் தொட்டியில் மனித எலும்பு கூடு கிடந்தது தெரிய வந்தது இதனால் காவல்துறையிடம் புகார் வழங்கப்பட்டு அங்கிருந்து எலும்புக்கூடு மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில் எலும்பு கூடாக கிடந்தவர் காணாமல் போன மாடசாமி தான் என்பது தெரிய வந்தது. லட்சுமணனின் வீட்டில் வாடகைக்கு ரசித்து வந்த பேச்சியம்மாள் என்கின்ற பிரியா (24) என்பவர் வீட்டை காலி செய்துவிட்டு கோவைக்கு சென்று விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் கோவைக்கு சென்று அவரை அழைத்து வந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பேச்சியம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் அவருக்கும் மாடசாமிக்கும் இடையே முறை தவறிய உறவு இருந்துள்ளது. ஆகவே மாடசாமி அவரை அடிக்கடி தொந்தரவு செய்ததால் அவரை கழுத்தை நெறித்து பேச்சியம்மாள் கொலை செய்திருக்கிறார். இதன் பிறகு அதே பகுதியில் வசித்து வந்த தன்னுடைய தாயார் மாரியம்மாள் (44) மற்றும் 17 வயது தம்பி உள்ளிட்ட ஒரு உடன் இணைந்து வீட்டின் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் உடலை போட்டு இருக்கிறார்கள்.
அக்கா பக்கத்தில் இருப்பவர்களிடம் எதுவுமே தெரியாததை போல சகஜமாக இருந்து வந்துள்ளனர். அதன் பிறகு மாடசாமியின் சக திருமண நிகழ்விலும் அவர்கள் பங்கேற்றுள்ளனர். பிறகு தாயார் தம்பி மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு அவர்கள் சென்று விட்டார்கள் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பேச்சியம்மன் அவருடைய தாயார் மாரியம்மாள் 17 வயது தம்பி உள்ளிட்டவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.