தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு..!! வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 20ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (ஜூன் 16) முதல் ஜூன் 20ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CHELLA

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத சேவா டிக்கெட் வரும் 21ல் ஆன்லைனில் வெளியீடு..!

Fri Jun 16 , 2023
திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் 21ம்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆர்ஜித சேவாக்கள் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட்டுக்கள் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. குறிப்பாக சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவாக்களுக்கான டிக்கெட்டுகள் பெற தேவஸ்தான வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அதில் பதிவு செய்தவர்கள் குலுக்கலில் தேர்வு செய்து தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள்.அதன்படி வரும் செப்டம்பர் 1ம் தேதி […]
thirupathitemple

You May Like