வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பும் கணவன்..!! கதறி அழுது போலீசில் புகாரளித்த பிக்பாஸ் ரச்சிதா..!!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வந்தனர்.


இந்நிலையில் நேற்று, மாங்காடு காவல் நிலையத்தில் ரச்சிதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவர் தினேஷ் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தினேஷை விசாரணைக்கு அழைத்த நிலையில், காவல் நிலையம் வந்த தினேஷ் ரட்சிதா வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

CHELLA

Next Post

டைட்டானிக் கப்பலை காண சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்

Wed Jun 21 , 2023
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,500 பேர் பலியாகினர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து அந்த இடம், சுற்றுலா பயணிகளும் பார்வையிடும் வகையில் […]
16Titanic 01 hjfc mediumSquareAt3X

You May Like