தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று, மாங்காடு காவல் நிலையத்தில் ரச்சிதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவர் தினேஷ் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தினேஷை விசாரணைக்கு அழைத்த நிலையில், காவல் நிலையம் வந்த தினேஷ் ரட்சிதா வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.