மக்களே உஷார்..!! வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் லிங்க்..!! தொட்டால் அவ்வளவு தான்..!! அரசு எச்சரிக்கை..!!

வாட்ஸ் அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க்குகளை திறக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டுமென அரசு எச்சரித்துள்ளது.


தற்போது பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதன் வழியே, மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வேலையை நடத்துகின்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை இணைத்துள்ள மொபைல் எண், மூலம் ஸ்மார்ட் போன்களில் வங்கியிடம் இருந்து செய்தி அனுப்புவது போன்ற மோசடிகள் மூலம் ஏமாற்றப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் சைபர் தோஸ்த், ட்விட்டரில் எச்சரிக்கை பதிவை கொடுத்துள்ளது.

இதில் மக்கள் சைபர் குற்றங்களில் ஏமாறாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடி செய்பவர்கள், வாட்ஸ் அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் சுருக்கமான லிங்க்கை (URL) அனுப்புகிறார்கள். இதனை நாம் தொடும்போது/ திறக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சைபர் தோஸ்த் தனது ட்விட்டரில், சைபர் மோசடிக்காரர்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அனுப்பியது போல ஒரு செய்தியை/ லிங்க்கை அனுப்பிய நோட்டீஸை பகிர்ந்துள்ளது.

CHELLA

Next Post

பாம்பு படுக்கையில் பரவசம்..!! பக்கத்துலயே 2 பெண்கள்..!! மகாவிஷ்ணு வேஷம்..!! தட்டி தூக்கிய செஞ்சி போலீஸ்..!!

Fri Jun 23 , 2023
போலி சாமியார்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நானே கடவுள் என்று கூறி மகாவிஷ்ணு போல வேஷம் போட்டு பாம்பு படுக்கையில் படுத்துக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரர் மாதிரி ஏமாற்றி கால் அமுக்கி விடச்சொல்லி அட்டகாசம் செய்து மக்களை ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி சாமியார்கள் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர். எத்தனையோ சாமியார்கள் சித்து வேலை செய்து மக்களை ஏமாற்றி பண மோசடி […]
பாம்பு படுக்கையில் பரவசம்..!! பக்கத்துலயே 2 பெண்கள்..!! மகாவிஷ்ணு வேஷம்..!! தட்டி தூக்கிய செஞ்சி போலீஸ்..!!

You May Like