இல்லத்தரசிகளின் பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும், கணவன் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உண்டு எனவும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டில் வேலை பார்த்து அதன் மூலமாக வாங்கிய சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவன் ஒருவர் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
மேலும் கணவனின் ஊதியத்தின் மூலமாக வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை இன்றி இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை பார்க்கிறார்கள் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல கணவனின் அனைத்து வேலைகளிலும் மனைவியின் பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்தவித சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அதே போன்று குடும்பத்தை கவனித்து தன்னுடைய பங்களிப்பை மனைவி வழங்குகிறார் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.