fbpx

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது..? பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!!

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில், 401-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆண்டுக்கும் மேலாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.

400 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில் விலை குறைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தல் மற்றும் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் வரவுள்ளதால் விலை குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 4 முதல் 5 ரூபாய் வரை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை..!! அதிரடி காட்டும் அமைச்சர் முத்துசாமி..!! இனி பணிநீக்கம் தான்..!!

Mon Jun 26 , 2023
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கையோடு அதிரடியாக வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த துறைகள் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி மின்சாரத்துறை […]

You May Like