உலகின் முதல் பறக்கும் கார்!… அமெரிக்க அரசு ஒப்புதல்!… எப்படி இயங்கும்; விலை குறித்த முழுவிவரம் இதோ!

உலகத்திலேயே முதல் முறையாக சாலைகளில் பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடம் சட்டப்பூர்வ அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தது. தற்போது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார், பயணிகள் போக்குவரத்திற்காக அமெரிக்க அரசிடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சான்றிதழ் பெற்ற முதல் பறக்கும் கார் இதுவாகும்.

இந்த பறக்கும் கார் மின்சாரத்தில் பறக்கக்கூடியது. இக்காரின் விலை $300,000 ஆகும். இந்த பறக்கும் காரில் 2 பயணம் செய்யலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்ட இடங்களில் நெரிசல் ஏற்பட்டாலோ இக்காரால் பறக்க முடியும். வரும் 2025ம் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு பறக்கும் கார்களை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இக்கார் சாதாரண சாலையில் மணிக்கு 25 மைல்களுக்கு மேல் செல்லாது. இந்த பறக்கும் கார் குறைந்த வேகம் கொண்டது.

KOKILA

Next Post

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றவில்லை! ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!

Sat Jul 1 , 2023
மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால், நிறுவனம் மத்திய அரசின் […]
Rape is Rape Karnataka High Court

You May Like