திருநங்கைகள் குழந்தையை தத்தெடுக்கலாமா..? கூடாதா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

குழந்தையை தத்தெடுக்க அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


சென்னையில் குடியேற்றத்துறை அதிகாரியாக பணிபுரிபவர் தான் திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர், ஏற்கனவே தமிழக காவல்துறையில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தவர். தற்போது குடியேற்றத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், “பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து டெல்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தேன்.

திருநங்கைகள் குழந்தையை தத்தெடுக்கலாமா..? கூடாதா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஆனால், திருநங்கை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் தெரிவிக்கவில்லை என்றும் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க கூடியவராக இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தான் அரசு பணியில் உள்ளதால் குழந்தையை சிறந்த முறையில் வளர்க்க முடியும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஜூன் 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு ஆணையத்திற்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அச்சமயம் மத்திய அரசும், மத்திய தத்தெடுப்பு வள ஆணையமும் பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் அளித்த நிலையில், மேலும் 2 வாரம் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

CHELLA

Next Post

திருவண்ணாமலையில் தரிசனம் செய்த ரஜினி..!! நீண்ட நாள் ஆசையாம்..!! குவிந்த ரசிகர்கள்..!! வைரல் வீடியோ..!!

Sat Jul 1 , 2023
லால் சலாம் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்துள்ள ரஜினி, அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். நீண்ட […]
திருவண்ணாமலையில் தரிசனம் செய்த ரஜினி..!! நீண்ட நாள் ஆசையாம்..!! குவிந்த ரசிகர்கள்..!! வைரல் வீடியோ..!!

You May Like