மகாராஷ்டிரா மாநிலம் துணை வில் இருக்கின்ற ரயில் நிலையம் மூன்றில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் அந்த பகுதியில் உள்ள நடைமேடையிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது ரயில்வே காவலர் ஒருவர் தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றியபடி செல்லும் காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
முகத்தில் திடீரென்று தண்ணீர் பட்டதும், உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி எழுந்து பார்ப்பதும், அந்த காவலர் எதுவுமே நடக்காததை போல நடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. பயணிகள் சிலர் அந்த காவலரின் செயலை அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட காவலரை சமூக வலைதள வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல் இன்று பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரம் நடைமேடை ஆக்கிரமிக்கின்ற விதமாக, பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு அந்த காவலர் அப்படி செய்ததில் தவறு ஏதும் இல்லை என்றும் சிலர் அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலை தான் இந்த சம்பவம் தொடர்பாக உன்னை ரயில்வே போட்ட மேலாளர் இந்து டுபே ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் நடைமேடையில் உறங்குவது நடந்து செல்பவர்களுக்கு இடையூறாக இருக்குமானால் அதற்காக அந்த கொடுமையை கையாண்ட விதம் நிச்சயமாக சரியானது அல்ல. சம்பந்தப்பட்ட அந்த ஊழியரிடம் பயணிகளை மாண்புடன், மரியாதை உடன் பணிவாக நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.