தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் ஹீரோயினாக குறுகிய காலம் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த காலகட்டத்தில் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. குறிப்பாக, விஜய்யுடன் இவர் நடித்த காதலுக்கு மரியாதை, அஜித்துக்கு ஜோடியாக நடித்த அமர்க்களம் ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.
நடிகை ஷாலினியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது அமர்க்களம் தான். ஏனெனில், அப்படத்தின் போது தான் அஜித்துக்கும், ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த படத்தின் நடித்து முடித்த அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அஜித்தை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி, இன்று வரை சினிமா பக்கமே வரவில்லை.
நடிகர் அஜித் – நடிகை ஷாலினி ஜோடிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலேயே முழு கவனம் செலுத்தி வரும் ஷாலினிக்கு, சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஐடியா சுத்தமாக இல்லையாம். இந்நிலையில், அஜித் உடனான திருமணத்துக்கு பின்னர் நடிகை ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ் படம் எது தெரியுமா..?
திருமணத்துக்கு பின்னர் ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ்படம், ‘பிரியாத வரம் வேண்டும்’ என்கிற படம் தான். இப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் இறுதியில் காதலர்கள் ஆவதே படத்தின் கதையாகும். நிறம் என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் வசூலிக்கவில்லை என்றாலும், இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் இப்படத்திற்கு தனி மவுசு இருந்து தான் வருகிறது.