தொடர் கனமழை..!! நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கனமழை காரணமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கூழப்பாவூர், கடையம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக விடமால் மழை பெய்து வருகிறது. அதிலும் நீலகிரியில் அதிக மழை தினமும் பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணி வரை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை நீலகிரிக்கு விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள், கோவையில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மற்றும் கோவைக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 10ஆம் தேதி வரை மழை வெளுக்க போகிறது. அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

’சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யுங்க’..!! அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!! தவறினால் கடும் நடவடிக்கை..!!

Fri Jul 7 , 2023
சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு நிர்வாக தரப்பில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி நிலவரப்படி, தங்களது சொத்துப் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை ஏராளமான அரசு ஊழியர்கள் தங்களது சொத்துப் பட்டியலை தாக்கல் […]
govt employees leave staff

You May Like