fbpx

’மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம்’..!! சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு..!!

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி உரிய காலத்தில் தமிழக அரசுக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வேண்டும். ஆனால், ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி நீர் இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை. இதனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருக்கும் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இருமாநிலத்திற்கும் காவிரி நீர் பிரச்சனை இருக்கும் நிலையில், மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கு புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான சித்தராமையா, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. மேலும், மேகதாது அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேகதாது அணை கட்டினால் காடுகள் அழிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இழப்பீடாக காடு வளர்க்க நிலம் கண்டறியப்பட்டு, அதை கையக்கப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரம் காட்டுவது நிலைமையை மேலும், பரபரப்பாக்கியுள்ளது.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்டுவதை நிறுத்துவது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் பேசியிருந்தார். இந்த சூழலில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”பிள்ளைகள் போல் வளர்த்தோம்”..!! வீடு வீடாக சென்று கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Fri Jul 7 , 2023
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972, (திருத்திய சட்டம் 2022)-ன் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாநகர் செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை […]
’தெரு நாயெல்லாம் விட்டுட்டு பிள்ளைகள் போல் வளர்த்த கிளியை ஏன் சார் பிடிக்கிறீங்க’..!! கதறிய அழுத உரிமையாளர்கள்..!!

You May Like