fbpx

#KH233..!! கமலை வைத்து இயக்கும் வினோத்..!! இது ஒரு பயோபிக் கதையா..? யாருடையது தெரியுமா..?

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத் என்பதை நாம் அறிவோம். அவர் இரண்டாவதாக இயக்கி வெளியிட்ட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதன் பிறகு தொடர்ச்சியாக 3 திரைப்படங்கள் நடிகர் அஜித் நடிப்பில் அவர் இயக்கி வெளியிட்டார். நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய 3 திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தற்போது, அவருக்கு கிடைத்திருக்கும் அடுத்த வாய்ப்பு தான் கமல்ஹாசனை இயக்குகின்ற ஒரு வாய்ப்பு. 

கமல்ஹாசன் நடிக்கும் 233-வது திரைப்படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். இந்நிலையில், RISE to RULE என்ற வாசகம் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் அப்டேட்டாக வெளியானது. இந்த படத்தின் கதை அரசியல் களம் சார்ந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படம் நெல் ஜெயராமன் அவர்களின் ஒரு பயோ பிக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 170-க்கும் மேற்பட்ட அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு எடுத்தவர் நெல் ஜெயராமன் என்பது நாம் அறிந்ததே.

ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார். தற்பொழுது நெல்லின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைக்கவும், நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பிக்கும் வண்ணமும் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம்..!! பிச்சையா போடுறீங்க..!! அதிரடி காட்டிய ஆட்சியர்..!!

Sun Jul 9 , 2023
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ‘தம்பி பிரியாணி’ என்ற பெயரில், புதிதாக பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ‘சிக்கனோ, மட்டனோ… ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம்’ என்ற அறிவிப்பை கடை உரிமையாளர் அறிவித்திருந்தார். இதனால், பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக கடைக்குள் முண்டியடித்து குவிந்தனர். வரிசை, சாலை வரை நீண்டிருந்ததால், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த அவ்வழியாக வந்த, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மக்கள் […]
ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம்..!! பிச்சையா போடுறீங்க..!! அதிரடி காட்டிய ஆட்சியர்..!!

You May Like