மருத்துவ பரிசோதனையில் இரட்டை குழந்தை..!! ஆனால், பிறந்தது ஒரு குழந்தை..!! எப்படி..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தின் முஹானா பகுதியில் வசிப்பவர் அனுப் குமார். இவரது மனைவி கர்ப்பம் தரித்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது ஒரு கட்டத்தில் மனைவிக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்ணின் கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த உறவினர்கள், மற்றொரு இடத்திலும் பரிசோதனை செய்துள்ளனர். அங்கும் இரட்டை குழந்தை உள்ளதாக சோதனை முடிவு வந்தது.


இதனால், குடும்பத்தினரும், உறவினர்களும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வழக்கமாக காட்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிரசவம் நடைபெற்ற நிலையில், ஆர்வத்துடன் காத்திருந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி செய்தி வந்தது. பிரசவத்தில் ஒரு குழந்தைதான் பிறந்தது, பெண்ணின் கருவில் ஒரு குழந்தைதான் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பரிசோதனையில் இரட்டை குழந்தை எனக் கூறப்பட்ட நிலையில், எப்படி ஒரு குழந்தைதான் இருக்கும் என கேள்வி எழுப்ப தொடங்கினர். ஒரு குழந்தையை மருத்துவமனை திருடிவிட்டது என புகார் கூறி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இவர்களை மருத்துவமனை நிர்வாகம் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் அனுப் குமார் இந்த விவகாரம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தி குற்றம் நடந்திருந்தால் உரிய நீதி வழங்கப்படும் என அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

CHELLA

Next Post

மகளிர் உரிமைத்தொகை..!! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு முக்கிய கடிதம்..!!

Mon Jul 10 , 2023
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தன்னார்வலர்களை பணியமர்த்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்கான வழிகாட்டி விதிமுறைகளை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இந்த திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையாளர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மகளிர் […]
Secretariat

You May Like