டுவிஸ்ட்…! 234 தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்”…! அதிரடியாக அறிவித்த புஸ்ஸி ஆனந்த்…!

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; விஜய்யின் சொல்லுக்கிணங்க இன்று காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்.


இந்த நாளில் மாணவ, மாணவிகளுக்கு, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளையும் தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

மழைக்காலத்தில் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபட!... இந்த 5 வகையான தேநீர் அருந்துங்கள்!

Fri Jul 14 , 2023
மழைக்காலத்தில் எந்த தேநீர் அருந்துவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்த தொகுப்பில் பார்ப்போம். மழைக்காலம் தொடங்கிவிட்டது, குளிர்ச்சியான கால நிலை நிலவுவதால், சிலருக்கு சளி தொல்லைகள் உண்டாகும். அந்தவகையில் சளி இருமல் பிரச்சனைகளில் இருந்து விடுபட பல்வேறு வகையான தேநீர் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். எனவே மழைக்காலத்தில் எந்த தேநீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்ப்போம். துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி […]
சாப்பாடு இல்லாமல் 50 ஆண்டுகளாக உயிர் வாழும் பாட்டி..!! எப்படி தெரியுமா..?

You May Like