இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கக்கூடும். ஓரிரு பகுதிகளில் இயல்பிலிருந்து 2️ முதல் 4️ டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக, அசவுகரியம் ஏற்படலாம். இன்று முதல் வரும் 4ம் தேதி வரையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை பொறுத்த வரையில், அடுத்த 2️ நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை பொறுத்தவரையில் இன்று முதல் வரும் 1ம் தேதி வரையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.