கோடையில் வீட்டில் ஏசி இருப்பது அத்தியாவசியமான ஒன்றாக தற்போது மாறி வருகிறது. இருப்பினும், ஏசி வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. வெயிலை சமாளிப்பதற்கு நாம் அனைவரும் திணறி வருகிறோம். ஏசி இல்லாமல் தூங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் போலவும். ஒருவேளை சம்மரை சமாளிக்க முடியாமல் சிலர் ஏசிகளை வாங்குகின்றனர். ஆனால், ஏ.சி வசதி இல்லாத பலர் தங்களது வீடுகளை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது என்று தெரிந்துகொள்வோம்.
ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு தேங்காய் சிரட்டைகளை வைத்து, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள். இந்த பாத்திரத்தை ஃப்ரிட்ஜில் வைத்து 8 மணி நேரம் உறைய விடுங்கள். இரவு உறங்கும் முன் இதை எடுத்துத் தூங்கும் அறையில் வைக்கலாம். மின்விசிறியில் இருந்து வரும் காற்று சிரட்டையில் பட்டால், அறை முழுவதும் இயற்கையான குளிர்ச்சியை பரப்பும்.
மாலை நேரத்தில் ஒரு பெரிய வாளியில் நிறைய தண்ணீர் ஊற்றி, அதில் 4-5 ஐஸ் கட்டிகளை போடுங்கள். அதைப் பயன்படுத்தி வீட்டின் தரையை முழுவதுமாக துடைக்கலாம். இதனால் டைல்ஸ் அல்லது தரை நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும். வீடின் உஷ்ணம் குறைந்து, இரவில் தூங்க குளுகுளுவென இருக்கும்.
மின்சார செலவு அதிகமாகாமல் ஃப்ரிட்ஜ் இயங்க சிறந்த வழி உப்பு பயன்படுத்துவதுதான். சிறிதளவு சமையல் உப்பை எடுத்து, ஃப்ரிட்ஜின் உள்ளே அனைத்து மூலைகளிலும் தூவுங்கள். இது அதிகமான பனி சேர்வதை தடுக்கும், மற்றும் ஃப்ரிட்ஜ் சரியாக வேலை செய்ய உதவும். கோடையில் வீட்டிற்குள் அதிக வெப்பம் வருவதற்கு கதவுகள், ஜன்னல்கள் காரணமாக இருக்கலாம். மதிய நேரங்களில் வெளிச்சம் நேரடியாக வீட்டிற்குள் வருவதை தவிர்க்கலாம். மாலை நேரங்களில் மட்டும் ஜன்னல்களை திறந்து இயற்கை காற்றை அனுபவிக்கலாம்.