நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனையே மழைக்காலத்தில் எப்படி துணிகளை காய வைப்பது என்பது தான். அதிலும் குறிப்பாக பெட்ஷீட், போர்வை, டோர்மேட் போன்றவற்றை காய வைப்பது கடினம். ஆனால் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த எளிமையான டிப்ஸ்களை பின்பற்றினாலே எளிதாக உங்கள் துணிகளை காயவைத்து விடலாம்.
ஒரு பெட்ஷீட் அல்லது போர்வையை மடித்து காய வைக்காமல், ஒரு முனையை ஒரு ஹேங்கரிலும், மற்றொரு முனையை மற்றொரு ஹேங்கரிலும் முடிச்சு போட்டு வீட்டிற்குள் காயவைத்தால் 2-3 மணி நேரங்களில் காய்ந்துவிடும். டோர்மேட்களையும் மடித்து காய வைக்காமல், இரு முனைகளிலும் ஹேங்கருடன் சேர்த்து ஊக்குகளை குத்தி காய வைத்தால் எளிதில் காய்ந்துவிடும்.
வாஷிங் மெஷினில் போர்வையை துவைப்பது பாதுகாப்பானது என்று அதன் பராமரிப்பு லேபிளில் குறிப்பிடப்பட்டால் மட்டுமே அதை மிஷினில் துவைக்க முடியும். சில துணி வகைகளை வாஷிங் மிஷினில் துவைக்கக் கூடாது. கைகளில் மட்டுமே துவைத்து உலர்த்த வேண்டும். உங்கள் போர்வையை எவ்வாறு பராமரிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால், அதை துவைப்பதற்கு முன் உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் படிக்கவும். நீங்கள் பயன்படுத்தும் போர்வைகள் வாஷிங்மிஷினில் துவைக்க உகந்தது எனில் பின் வரும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.
முதலில் உங்கள் வாஷிங் மெஷின் என்ன திறன் கொண்டது என்பது அவசியம். அதாவது உங்கள் வாஷிங் மெஷின் எடை 7 கிலோ என்று வைத்துக்கொள்வோம், அப்படியானால், உங்கள் போர்வை 7 கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அதை வாஷிங் மெஷினில் போடலாம். போட்டதும் ஜென்டில் ஆப்ஷனில் வைக்கவும். டெலிகேட்ஸ் என்ற பெயரில் உங்கள் வாஷிங் மெஷினில் இருக்கலாம்.
நீங்கள் போர்வையை வாஷிங் மெஷினில் துவைத்தால், அதை உலர்த்துவதற்கு முன், அதை இரண்டு மூன்று முறை மேலும் கீழும் திருப்புங்கள், அதனால் அது ஒரே இடத்தில் தேங்கிக்கொண்டு சுற்றாது. மேலும் கீழும் அடித்து துவைக்கும். மிஷின் முழுவதுமாக துவைத்து முடித்ததும் மீண்டும் ஸ்பின்னர் , டிரையர் ஆப்ஷனில் வைத்தால் மிச்சம் இருக்கும் நீரையும் உறிஞ்சு எடுத்துவிடும். இதனால் நன்கு காய வைத்தது போன்று இருக்கும். வெளியே காய வைத்தாலும் ஒரே நாளில் காய்ந்துவிடும். அவ்வப்போது வெயில் வரும் நேரம் பார்த்து காய வைத்து எடுத்தால் கூட போதுமானது.
வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம். இது போர்வையின் ரோமங்களை சேதப்படுத்தும். எனவே, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரைக் கழுவுவதற்கு எப்போதும் பயன்படுத்த வேண்டும். வாஷிங் மெஷினில் போர்வைகளை துவைக்கும் போது ப்ளீச், வினிகர் அல்லது எந்த துப்புரவுப் பொருளையும் வாஷிங் மெஷினில் போட வேண்டாம். ஒவ்வொரு போர்வையின் ஃபேப்ரிக் வேறுபட்டது என்பது அவசியம். எனவே விலையுயர்ந்த போர்வையை சலவை இயந்திரத்தில் போடுவதற்கு முன், அது சேதமடையாமல் இருக்க அதன் வழிமுறைகளை ஒரு முறை படித்துக்கொள்வது அவசியம்.