திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சற்றுமுன் ராமதாஸ் அறிவித்த நிலையில், திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அன்புமணி அறிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார. இதனால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அன்புமணி ராமதாஸ் கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளுடன் சென்னை சோழிங்கநல்லூரில் சந்திப்பை நடத்தி வருகிறார். அன்புமணியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமாவும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அன்புமணியின் ஆதரவாளராக உள்ள திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே சமயம் அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து விழுப்புரம் பாமக மத்திய மாவட்ட செயலாளர் மயிலம் சிவக்குமாரை நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மயிலம் சிவக்குமாருக்கு பதில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி செயல்படுவார் எனவும் அறிவித்தார். பாமகவில் தந்தை மகன் இடையே ஏற்பட்ட விரிசல் நிர்வாகிகளை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சற்றுமுன் ராமதாஸ் அறிவித்த நிலையில், திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அன்புமணி அறிவித்துள்ளார். பாமக பொதுக்குழுவில் என்னை தலைவராக முறைப்படி தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கிகரீக்கப்பட்டுள்ளது. பாமகவில் நிர்வாகிகளை நியமிக்க, நீக்க தலைவராக எனக்கே முழு அதிகாரம் உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கட்சி தலைவர் பதவியில் ராமதாஸும், அன்புமணியும் உறுதியாக இருப்பதால் பாமக 2 ஆக உடைவது உறுதி என கூறப்படுகிறது. அப்படி உடையும் பட்சத்தில் ராமதாஸ் பக்கம் ஜிகே மணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், அன்புமணி பக்கம் இளம் தலைவர்களும் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
Read more: அன்புமணி ஆதரவாளர் திலகபாமா பொருளாளர் பதவியில் இருந்து நீக்கம்..!! – ராமதாஸ்