ஓவர் நைட்டில் ஒபாமா ஆன சின்மயி.. தமிழ் சினிமாவில் தடை விதிக்கப்பட்டது ஏன் தெரியுமா..?

chinmayi

முத்த மழை பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சின்மயியை தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டது ஏன் தெரியுமா..?


மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. 

தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆகுறது என்று சொல்வார்கள். அதுதான் பின்னணி பாடகி சின்மயிக்கு நடந்து இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக சின்மயி தமிழ் சினிமாவில் பாடக்கூடாது என தடை செய்யப்பட்டிருப்பதே பல ரசிகர்களுக்கு இப்போதுதான் தெரிகிறது. முத்தமழை பாடலால் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சின்மயியை தமிழ் சினிமாவில் இருந்து தடை செய்தார்கள்? என்ற கேள்வி பலருக்கு எழும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் #MeToo பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு காரணம் பாடகி சின்மயிதான். இவர், பாடலாசியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த பிரச்சனைக்கு பிறகு நகைச்சுவைகளுக்கும், கேலி கிண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்ட சின்மயியை, மேடை நிகழ்ச்சிகளிலும் திரையுலகிலும் காணவே முடியவில்லை. இதையடுத்து தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து, அதன் தலைவர் ராதா ரவி நீக்கியதாக கூறப்படுகிறது.

Read more: சாதம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையுமா..? – மருத்துவர் விளக்கம்

Next Post

“நான் உயிரோடு இருக்கக் கூடாது”..!! “யாருக்கும் தெரியாமல் எங்காவது போய்விட வேண்டும்”..!! ஜி.கே.மணி வேதனை

Sat May 31 , 2025
என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இதை நான் சொல்லக்கூடாது. வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும். […]
GK Mani 2025

You May Like