கழிவறையில் கொதிக்கும் சோறு.. பொது கழிப்பிடத்தில் வட மாநில இளைஞர்கள் குடித்தனம்..!! அரே பையா நியாமா இது..?

public toilet

தூய்மை பாரதம் 2.0 திட்டத்தின் கீழ் 36.28 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொதுக் கழிப்பிடத்தில் சுமார் 1 வருடங்களுக்கு மேலாக தங்கி வரும் வடமாநில இளைஞர்கள்..


சென்னை திருவேற்காடு நகராட்சி வீரராகவபுரம் காடுவெட்டி பகுதியில் தூய்மை பாரதம் இயக்கம் 2.0 என்ற திட்டத்தின் சார்பில் 2021-2022 ஆண்டின் கீழ் பொது கழிப்பிடம் 36.28 லட்சம் மதிப்பீட்டில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பொது கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 2 வருடங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இதில் வட மாநில இளைஞர்கள் வாடகைக்கு தங்கி இருப்பதாக அருகில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தகவல் தெரிவிக்கிறார்கள்..

கட்டி முடிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பொது பொது கழிப்பிடத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு வட மாநில இளைஞர்கள் சுமார் 1 வருடங்களுக்கு மேலாக தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. வடமாநில இளைஞர்கள் அருகில் இருக்கக்கூடிய புதூர் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும் ஒரு வாரமாக தான் இங்கு உள்ளதாகவும் வட இளைஞர்கள் கூறுகிறார்கள்..

அருகில் இருக்கக்கூடிய பொதுமக்கள் இவர்களை கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக பார்த்து வருவதாகவும் கூறுகிறார்கள். பொதுக்கழிவறையில் வீடுகள் போல் வட மாநில இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறனர். கழிவறையில் அடுப்பு வைத்து சமைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் யாருக்கேனும் வாடகை கொடுத்து தங்குகிறார்களா அல்லது பயன்பாட்டில் இல்லாத ஒரு இடம் என்பதால் தங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Read more: டிரைவிங் தெரியுமா..? அரசு மருத்துவ கல்லூரியில் ஓட்டுநர் வேலை இருக்கு..!! ரூ.71,900 வரை சம்பளம்..!!

Next Post

முதலில் உடலுறவு.. பிறகு திருமணம்.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி கிராமம்..!! இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா..?

Sun Jun 1 , 2025
இந்தியா ஒரு பண்பாட்டு பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன மத வழக்கங்களுக்கு எதிராகவும், வேறுபட்ட சிந்தனையிலும் இருக்கின்றன.. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் Ghotul பாரம்பரியம் இதற்கொரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த பழங்குடியினத்தில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே, 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண், பெண்கள், Ghotul எனப்படும் மூங்கிலால் […]
tribal 1

You May Like